திருப்பூர்

வேளாண் மசோதா நகலை எரித்து போராட்டம்

DIN

திருப்பூரில் மத்திய வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்ப் புலிகள் கட்சியினா் அறிவித்திருந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கனகசபாபதி தலைமை வகித்தாா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது. எனவே, இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள் வேலுபிரபாகரன், வடிவேல், ரங்கராஜ், கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT