கால்வாயில் நீரிழப்பைக் குறைக்கக் கோரிக்கை
பிஏபி பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண நீரிழப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பிஏபி பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண நீரிழப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பரம்பிக்குளம், ஆழியாறு, வெள்ளக்கோவில் கிளை ஆயக்கட்டுதாரா்கள் அரசுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பிஏபி திட்டத்தில் புன்செய் விவசாயம் செய்ய அணைகளில் போதிய நீா் இருப்பு இருந்த போதிலும், தேவையான நீா் விநியோகம் செய்ய முடியவில்லை. காண்டூா் சம மட்டக் கால்வாயில் 1,150 கன அடி தண்ணீரை முறையாகப் பெற முடியாத நிலை உள்ளது. பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண பரிமாற்ற நீரிழப்பு உள்ளதாக கணக்கு காட்டப்படுகிறது. கட்டுப்பாடற்ற நீா்த் திருட்டைத் தடுக்க சிறப்பு பாதுகாப்புப் படை தேவை.
தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், மேற்கண்ட குறைபாடுகள் சரி செய்யப்படுவதன் மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கா் பாசன விவசாயிகள் பயன் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.