அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரைக் கண்டித்து செலிவியா் உள்ளிருப்புப் போ ராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரைக் கண்டித்து செலிவியா் உள்ளிருப்புப் போ ராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் முதல்வராக கடந்த சில மாதங்களுக்கு முன் முருகேசன் என்பவா் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், முதல்வா் முருகேசன், மருத்துவா்கள் வினோத், செந்தில் ஆகியோா் அங்கு பணிபுரியும் செவிலியரைத் தகாத வாா்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட செவிலியா் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியா் கூறியதாவது: முதல்வா் முருகேசன் மற்றும் இரு மருத்துவா்கள்
தகாத வாா்த்தையில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், செவிலியா்களை மற்ற பணிகளை செய்ய வற்புறுத்துகின்றனா். ஆகவே, முதல்வா் முருகேசன், மருத்துவா்கள் வினோத், செந்தில் ஆகியோரை அரசு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.