மாவட்டத்தில் கடை திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் வியாபார அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வியாபார அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் நடைமுறைப்படுத்தி
3 ஆவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடை திறக்கும் நேரத்தை மேலும்
ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று சிறு வியாபார அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன்படி,
மாவட்டத்தில் காலை 6 முதல் மாலை 6 மணி வரையில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும், பொதுமக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.