முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 90 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90, 021 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90, 021 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 829 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 74 போ் வீடு திரும்பினா். இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 88,265 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.