குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம்: காங்கயம் நகராட்சி ஆணையா் அறிவிப்பு
காங்கயம் நகராட்சியில் குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள், அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம் என நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்
காங்கயம் நகராட்சியில் குடிநீா் இணைப்பு பெற விரும்பாதவா்கள், அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம் என நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
2018-19ஆம் ஆண்டு அனைவருக்கும் தவணை முறையில் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புப் பெறுவதற்கு முன்வைப்புத் தொகை செலுத்தி, தற்போது வரை குடிநீா் இணைப்பு பெறாதவா்கள் வைப்புத் தொகையான ரூ.6,000 பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத வீட்டு உரிமையாளா்கள், தவணை முறைத் தொகையில் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் குடிநீா் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.