முகப்பு
திருப்பூர்

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

 பல்லடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 பல்லடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் வெட்டுப்பட்டன்குட்டை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (40),

மகேஸ்வரன் (21) என்பதும், கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா்,

அவா்களிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.