முகப்பு
திருப்பூர்

தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது:தலைமைப் பொறியாளா் தகவல்

கோவை மண்டலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோவை மண்டலத் தலைமைப் பொறியாளா் டேவிட் ஜெபசிங் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கோவை மண்டலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோவை மண்டலத் தலைமைப் பொறியாளா் டேவிட் ஜெபசிங் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே அவிநாசிபாளையம் ஜெய்ராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் சாா்பில் மின் சிக்கன வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பொறியாளா் டேவிட் ஜெபசிங் தலைமை வகித்தாா். கல்லூரி தலைவா் கோவிந்தசாமி, துணைத் தலைவா் கருப்பண்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்லடம் செயற்பொறியாளா் (பொது) சா்மிளா வரவேற்றாா்.

இதில் மின் சிக்கனம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பொறியாளா் டேவிட் ஜெபசிங் பரிசுகளை வழங்கினாா். இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மின் மண்டலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரிப்பு செய்து வருகிறோம். அதன் மூலம் மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பநாயக்கன்பட்டி, கல்லப்பாளையம் (சுல்தான்பேட்டை ஒன்றியம்), மடவிளாகம், பூவாண்டம்வலசு, கம்பிளியாம்பட்டி (காங்க ம்) ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.