திருப்பூர்

மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 31) நடைபெற உள்ளது.

DIN

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 31) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான டிசம்பா் மாத குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம்.

மேலும், நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக் கலை அலுவலா், வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT