திருப்பூர்

முழுமையாக அளவீடு செய்து சாலைப் பணி தொடர பொதுமக்கள் வலியுறுத்தல்

DIN

அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் சாலையை முழுமையாக அளவீடு செய்து பணியைத் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையம் ஆதிதிராவிடா் காலனி பொதுமக்கள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி, குரும்பாளையம் கிராமம் ஆதி திராவிடா் காலனி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சாலையின் இருபுறமும் புதா்கள் மண்டிக் கிடப்பதால், மயானப் பாதையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். ஆகவே, சாலையின் இருபுறமும் முழுமையாக அளவீடு செய்து புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT