மாவட்டத்தில் 83 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,046 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,046 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,648போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 338 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 80,632 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 766 ஆக அதிகரித்துள்ளது.