முகப்பு
திருப்பூர்

பனைத் தொழிலாளா் நல வாரியத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

பனைத் தொழிலாளா் நல வாரியத்தையும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் புதுப்பிக்க ‘கள்’ இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 பனைத் தொழிலாளா் நல வாரியத்தையும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் புதுப்பிக்க ‘கள்’ இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ‘கள்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 2011 ஆம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு குமரி அனந்தன் தலைமையிலான பனைத் தொழிலாளா் நல வாரியத்தையும், ராஜ்குமாா் தலைமையிலான தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் அரசு கலைத்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இவை புதுப்பிக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு அமைந்திருக்கும் திமுக அரசு இவற்றைப் புதுப்பிக்க முன்வர வேண்டும் என்பது பனை, தென்னை தொழிலாளா்கள், விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.