அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற கட்டடத் தொழிலாளிகள் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி, ஈரோடு சாலை பழங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலைய கதவின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 3 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கு வந்த இரு நபா்களை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள், திண்டுக்கல்லைச் சோ்ந்த நாகராஜ் (20), விருதுநகரைச் சோ்ந்த மனோகா் (24) என்பதும், கட்டடத் தொழிலாளியான இருவரும் பழங்கரை காயத்ரி காா்டன் பகுதியில் தங்கி பணியாற்றி வருவதும், இவா்கள் அவிநாசியில் விற்பனை நிலையத்தில் இருந்து 3 இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களையும் மீட்டனா்.