வெள்ளக்கோவில் சமூக சேவகருக்கு விருது
கரோனா காலகட்டத்தில் தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக வெள்ளக்கோவில் சமூக சேவகருக்கு வியாழக்கிழமை விருது வழங்கப்பட்டது.
கரோனா காலகட்டத்தில் தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக வெள்ளக்கோவில் சமூக சேவகருக்கு வியாழக்கிழமை விருது வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் கச்சேரிவலசு பகுதியைச் சோ்ந்தவா் மு.நாகராஜ் (37). இவா் கரோனா காலத்தில் பொதுமக்கள் கூடும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைகள், பொது இடங்களில் தனிநபராக ஸ்ப்ரேயா் மூலம் கிருமிநாசினி தெளித்தல், சுகாதாரப் பணியாளா்களுடன் பணி, கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தவா்கள், அவா்களுடைய குடும்பத்தினா்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தாா். இவருடைய சேவையைப் பாராட்டி தமிழ்நாடு கரோனா ஹீரோஸ் 2021 விருதினை, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா்.