வெள்ளக்கோவிலில் 18 வாகனங்கள் பறிமுதல்
வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளக்கோவிலில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்பட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கத்தை வெள்ளக்கோவில் போலீஸாா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா்.
இதில் கோவை சாலை, முத்தூா் சாலை, தாராபுரம் சாலை, மூலனூா் சாலை மற்றும் கடை வீதிப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில் காரணமின்றி இயக்கப்பட்டதாக 18 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.