முகப்பு
திருப்பூர்

முதல்வரின் நடவடிக்கையால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கை காரணமாகத்தான் கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கை காரணமாகத்தான் கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நோய்த் தடுப்பு தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

இதன் பிறகு அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்ற பணிகளைக் குறைத்துக் கொண்டு கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறாா்.

இதன் காரணமாக தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பானது 37 ஆயிரத்தில் இருந்து தற்போது 15 ஆயிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், அதிகாரிகளுடன் நாள்தோறும் ஆலோசனைகளை நடத்தி வருவதுடன், களப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளா் கே.கோபால், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் கே.எஸ்.பழனிசாமி, நகா் ஊரமைப்பு இயக்குநா் கணேசன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.