திருப்பூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. எனினும், திருப்பூரில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் 10 சதவீதத் தொழிலாளா்களுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், செளடாம்பிகை நகரில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்தில் 50 தொழிலாளா்களுக்குப் பதிலாக 200 போ் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.