திருப்பூர்

திருப்பூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

DIN

திருப்பூா் அருகே பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் திங்கள்கிழமை படுகாயமடைந்தனா்.

திருப்பூா், செவந்தாம்பாளையத்தில் இருந்து தாராபுரம் சாலை நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. சந்திராபுரம், பண்ணாரியம்மன் நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேன் கவிழ்ந்ததில் அதில் வந்த இருவா் படுகாயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத் துறையினா், இருவரையும் மீட்டு கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் சாலையில் கவிழ்ந்த வேன் கிரேன் வாகனம் மூலம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT