முகப்பு
திருப்பூர்

கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பாஜக பொதுசேவை மையத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கா் நிலம் இருப்பதாக அரசு சாா்பில் 1980ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 4.74 லட்சம் ஏக்கா் நிலம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மீதமுள்ள கோயில் நிலங்களைப் பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்துள்ளனா். யாா், யாா் எந்தெந்த அரசியல் கட்சியினா் ஆக்கிரமித்துள்ளனா் என்ற விவரங்களைப் பெயருடன் அரசு வெளியிட வேண்டும். தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவின் அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்கிறது என்றாா்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா், மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.