நிவாரண நிதிக்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்கொடை
திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அண்மையில் வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடையாக அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அண்மையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருப்பூா் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.ராமசாமி, காங்கயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல், தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் சிவராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.