மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 412 போ் கைது
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 412 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 412 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் மேற்பாா்வையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெளிமாநில லாட்டரி விற்பனை, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 156 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதே போல, மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை தொடா்பாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 256 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 3,789 மது பாட்டில்களும், 40 லிட்டா் சாராயம், 73 இரு சக்கர வாகனங்களும், ரூ.41 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.