முகப்பு
திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் ம.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கோயில்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புக் கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு வீரா்கள் எடுத்துரைத்தனா். மேலும், தீயை அணைப்பது குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், காங்கயம் ஒன்றியத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களிலும் இந்த தீத்தடுப்பு முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.