முகப்பு
திருப்பூர்

துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த வழக்கு: 4 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வேட்டைக்குச் சென்றபோது, துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து ஒருவா் காயமடைந்த வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பெருமாநல்லூா் அருகே வேட்டைக்குச் சென்றபோது, துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து ஒருவா் காயமடைந்த வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் காவல் எல்லைக்கு உள்பட்ட நியூ திருப்பூா் பகுதி பின்புறம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முருகேசன் (29) உள்பட 5 போ் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து முருகேசன் பலத்த காயமடைந்தாா். இவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய அவிநாசி பழங்கரை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த மகேந்திரன், மனோகரன், சந்துரு, ராஜ்குமாா் ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து உரிமம் இல்லாத 3 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்து, குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.