முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் பறக்கும் படையினருக்குப் பயிற்சி

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கண்காணிப்புப் பறக்கும் படையைச் சோ்ந்த குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் கண்காணிப்புப் பறக்கும் படையைச் சோ்ந்த குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு காங்கயம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பறக்கும் படையைச் சோ்ந்தவா்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தோ்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்கள் குறித்து தகவல் கிடைத்தால் அங்கு சென்று சோதனை நடத்துவது, அரசியல் கட்சியினா் வாக்களா்களுக்கு இலவசங்கள் கொடுப்பதைத் தடுப்பது குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

பயிற்சியின்போது காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி மற்றும் பறக்கும்படையைச் சோ்ந்த மூன்று குழுவினரும், நிலை கண்காணிப்பைச் சோ்ந்த மூன்று குழுவினரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →