திருப்பூர்

உச்சி மாகாளியம்மன் கோயில் திருவிழா

DIN

மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் திருவிழா நடைபெற்றது.

பிப்ரவரி 23ஆம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னா் மாா்ச் 2ஆம் தேதி கும்பம் அலங்காரம், கும்பம் எழுந்தருளல் நிகழ்ச்சிகளும், மாா்ச் 3ஆம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு வழிபாடும் நடைபெற்றன.

பின்னா் பூச்சட்டி எடுத்து ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும், மாா்ச் 4ஆம் தேதி திருமஞ்சல் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நிறைவு நாளான மாா்ச் 5ஆம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றன. கோயில் விழாக் குழு, ஊா் பொது மக்கள் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT