முகப்பு
திருப்பூர்

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம் தலைமை வகித்தாா். விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வி.வி.மோகனாம்பாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு நவீன பாதுகாப்பு அளிக்கும் மின்னணுவியல் கருவிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

மகளிா் தின விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஈரோடு என்.ஆா். கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரா் என்.ஆா்.தமிழ்செல்வி, கல்லூரி பேராசிரியா் ஜி.ராமசாமி, மகளிா் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளா்களான பேராசிரியா்கள் எஸ்.ராதிகா, எம்.யுவராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →