முகப்பு
திருப்பூர்

உடுமலையில் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியருக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியருக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக உயா் கல்வித் துறை சாா்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் உடுமலை பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியா் டி.சிவகுமாருக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

இவா் மத்திய, மாநில அரசுகளின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுகள், பரிசுகளை பலமுறை பெற்றுள்ளாா். குறிப்பாக தேசிய அளவில் புது தில்லியில் நடைபெற்ற இன்ஸ்பயா் அறிவியல் கண்காட்சியில் மாநில பிரிவில் இரண்டு முறை பரிசுகள் பெற்று குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெற்றுள்ளாா்.

Advertisement

மேலும், சிறந்த கல்விப் பணிக்காக நல்லாசிரியா் விருதும் பெற்றுள்ளாா். இந்நிலையில், மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற ஆசிரியா் டி.சிவகுமாருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மற்றும் ஆசிரிய ா்கள் விருது பெற்ற ஆசிரியா் டி.சிவகுமாரைப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments