திருப்பூர்

அவிநாசி தோ்த் திருவிழாவுக்காக இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்

DIN

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவுக்கு உபயோகப்படுத்துவதற்காக கோயில் அருகில் உள்ள இடத்தை தூய்மைப்படுத்த முயன்றவா்களை காவல், வருவாய்த் துறையினா் புதன்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி-கோவை சாலை அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் பகுதியில் வண்டிப்பேட்டைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன. இந்நிலையில் சேவூா் சாலை பிரிவு எதிரில், அவிநாசி கோயில் செல்லும் வழியில் உள்ள இடத்தை, ஒரு சமூகத்தினா் தோ்த் திருவிழா காலத்தில் நீா்மோா், அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் செய்வதற்காக புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். இதையறிந்த காவல், வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT