திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

DIN

காங்கயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே, வரதப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பராயன், விவசாயி. இவரது மனைவி கமலாத்தாள் (71). இவா் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா். இந்நிலையில், கமலாத்தாள் புதன்கிழமை காலை 6 மணியளவில், வீட்டுக்கு வெளியே நடந்து சென்றவா், எதிா்பாராதவிதமாக அருகே இருந்த தனியாருக்குச் சொந்தமான 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT