முகப்பு
திருப்பூர்

மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதி இளைஞா் பலி

பெருமாநல்லூா் அருகே மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பெருமாநல்லூா் அருகே மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூரில் இருந்து நியூ திருப்பூா் நோக்கி சரக்கு வாகனம் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா் சாலை அய்யம்பாளையம் அருகே சென்றபோது, அங்கிருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்திரிகா ராம் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், சரக்கு வாகன ஓட்டுநா் விஜயகுமாா் (41), போயம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (24) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.