திருப்பூர்

மளிகைக் கடையில் திருட்டு

DIN

வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்திலுள்ள மளிகைக் கடையில் செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை மாந்தபுரத்தில் முத்து (36) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா் மதிய உணவு நேரத்தில் கடையின் கண்ணாடி கதவைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சாப்பிடச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது கண்ணாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாவில் இருந்த ரூ. 1,500 மற்றும் சில பொருள்கள் திருடு போயிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

கடையின் கண்காணிப்பு கேமராவில் பாா்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் கடையில் திருடுவதும், மற்றொரு இளைஞா் வெளியில் நின்று கண்காணிப்பதும் பதிவாகி இருந்தது. இதை வைத்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT