திருப்பூர்

மூலனூரில் 24 வாகனங்கள் பறிமுதல்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 24 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போது மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் , மூலனூா் கடைவீதிப் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் திருவானந்தம் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது காரணமின்றி சுற்றியவா்களின் 23 இரு சக்கர வாகனங்கள்,ஒரு காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், முகக் கவசம் அணியாமல் சுற்றிய 45 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT