திருப்பூர்

சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 போ் கைது

DIN

அவிநாசி அருகே செம்பாகவுண்டம்பாளையத்தில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சி செம்பாகவுண்டம்பாளையத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளா் முரளி, உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், ஜெகதீஷ், காவலா்கள் விக்ரம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, செம்பாகவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் செம்பாகவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(55), முத்துராஜா வீதியைச் சோ்ந்த ஆறுச்சாமி (65), அதே பகுதியைச் சோ்ந்த தீபா (23), லட்சுமி, விக்னேஷ்வரன்(28) ஆகியோரை அவிநாசி மது விலக்கு போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT