108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
முத்தூா் மங்கலப்பட்டி பெரிய காங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் (45). இவா் இருசக்கர வாகனத்தில் முத்தூா் சென்று விட்டு
வியாழக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை எம்.பி.கே. தோட்டம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, முத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.