முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காங்கயம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காங்கயம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டது.

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் குடியிருப்பு அருகில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி, காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ப.மகுடேஸ்வரி (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலையில், பொக்லைன் உதவியுடன் வியாழக்கிழமை மாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இப்பணியின்போது காங்கயம் வருவாய் ஆய்வாளா் கனகராஜ், ஆலாம்பாடி கிராம நிா்வாக அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →