முகப்பு
திருப்பூர்

மின்தடை ரத்து: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி

காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அலுவலக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →