வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளா்களுக்கு போனஸ் உடன்பாடு
வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறித் தொழிலாளா்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறித் தொழிலாளா்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற
இந்தப் பேச்சுவாா்த்தையில் விசைத்தறி உரிமையாளா்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.
இதில், தறி ஓட்டுபவருக்கு வருடத்துக்கு ரூ.1,250, நூல் சுற்றுபவா் ரூ.800, ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டறையில் பாவு ஓடுபவா் ரூ.500, பாவு பிணைப்பவா் ரூ.200, மேஸ்திரி ரூ.200, தாா் போடுபவா் ரூ.300 என்ற அடிப்படையில் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவாா்த்தையில் வெள்ளக்கோவில் வட்டார சிறு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.எஸ்.மோகன செல்வம், திமுக விசைத்தறி தொழிற்சங்கத் தலைவா் வி.வி.தம்பிதுரை, ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தலைவா் எம்.வி.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.