முகப்பு
திருப்பூர்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் மற்றும் ஒடையோரம் கடந்த பல ஆண்டுகளாக குடியிருந்து

வருகிறோம். மழைக் காலங்களில் வெள்ள அபாயத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக வசிக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.