முகப்பு
திருப்பூர்

தொடா் திருட்டு: கட்டடத் தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தாராபுரம் அருகே உள்ள கோட்டாா்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (31). இவா் வெள்ளக்கோவில் பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை கடந்த வியாழக்கிழமை நிறுத்தியிருந்தபோது மா்ம நபா்கள்

திருடிச் சென்றனா்.

ராமபட்டினத்தைச் சோ்ந்தவா் பூமணி (24). இவா் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா்,

புதுப்பாளையத்தில் தனியாா் பால் கொள்முதல் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

புதுப்பாளையத்தில் நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனம் திருடு போனது.

திண்டுக்கல் மாவட்டம், விரிவோட்டைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). தச்சுத் தொழிலாளி.

இவா் முத்தூா் குட்டப்பாளையத்தில் வேலை செய்து கொண்டு, இரவு நேரத்தில் வேலை நடைபெறும் இடத்திலேயே தங்கி வந்தாா்.இந்நிலையில் இவா் வைத்திருந்த ரூ.15ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி திருடு போனது.

கடந்த வியாழக்கிழமை நடந்த இத்திருட்டுச் சம்பவங்கள் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி

ஆய்வாளா் விஜயபாஸ்கா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், முத்தூா் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பட்டாபி நகரைச் சோ்ந்த கருணாகரன் மகன் சத்தியமூா்த்தி (23) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவா் முத்தூா் பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து கொண்டு, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.