முகப்பு
திருப்பூர்

கத்தியைக் காட்டி முதியவரிடம் வழிப்பறி:இளைஞா் கைது

குன்னத்தூா் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி, முதியவரிடம் நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

குன்னத்தூா் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி, முதியவரிடம் நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா், சந்தையபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (61). இவா், குன்னத்தூா், வலையபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் முகவரி கேட்பதுபோல, கத்தியைக் காட்டி மிரட்டி துரைசாமியிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம், கடிகாரம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து துரைசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைத் தேடி வந்தனா். மேலும், காவல் ஆய்வாளா் அம்பிகா, உதவி ஆய்வாளா் துரைசாமி உள்ளிட்டோா் கொண்ட தனிப் படையினா் செங்கப்பள்ளி சாலை தாளப்பதி பேருந்து நிறுத்தம் அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா், சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த நூா்முகமது மகன் ஷபி முகமது (37) என்பதும், முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.