முகப்பு
திருப்பூர்

குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது: காங்கயம் நகராட்சி அறிவுறுத்தல்

நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் தீ வைத்து எரிக்கக் கூடாது என காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் தீ வைத்து எரிக்கக் கூடாது என காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது: காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி குப்பைக் கிடங்குக்கு உரிய நேரத்தில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும். மாறாக குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது. தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும். குப்பைகளை பொதுமக்கள் சாலையில் கொட்டிச் செல்வதைத் தடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுத்து, காங்கயம் நகரம் சுத்தமான நகராக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →