சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்..! யார் யாருடன் மோதுகிறார்கள்?
சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் குறித்து...
சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்து காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன.
முதல்கட்டமாக, நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ரியல் மாட்ரிட், ஆர்செனல், ஸ்போர்டிங் ஆகிய அணிகள் காலிறுதிக்கு புதன்கிழமை முன்னேறின.
இரண்டாம் கட்டமாக நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா 8-3 என நியூகேஸிலையும் பயர்ன்மியூனிக் 10-2 என அட்லாண்டாவையும் லிவர்பூல் அணி 4-1 என கலாடசரே அணியையும் அத்லெடிகோ மாட்ரிட் 7-5 என டோட்டஹம் ஸ்பர் அணியையும் வீழ்த்தின.
காலிறுதிக்கு முன்னேறியுள்ள 8 அணிகள்: பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல், ஸ்போர்டிங், பார்சிலோனா, லிவர்பூல், பயர்ன் மியூனிக், அத்லெடிகோ மாட்ரிட்.
யார் யாருடன் மோதுகிறார்கள்? இரண்டு கட்டமாக நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா - அத்லெடிகோ, ரியல் மாட்ரிட் - பயர்ன் மியூனிக், பிஎஸ்ஜி - லிவர்பூல், ஸ்போர்டிங் - ஆர்செனல் அணிகளும் மோதுகின்றன.
ரியல் மாட்ரிட் - பயர்ன் மியூனிக் அணிகள் மோதும் போட்டி கிட்டதட்ட இறுதிப் போட்டி அளவுக்கு சுவாரசியமாகவும் பார்சிலோனா - அத்லெடிகோ மாட்ரிட் போட்டி அரையிறுதி அளவுக்கு சுவாரசியமாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.