திருப்பூர்

கோயில் பூசாரிகளுக்கு பொங்கல் கருணைக் கொடை வழங்க கோரிக்கை

கோயில் பூசாரிகளுக்கு பொங்கல் கருணைக் கொடையை அரசு வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

கோயில் பூசாரிகளுக்கு பொங்கல் கருணைக் கொடையை அரசு வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவா் வாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்களுக்கு பொங்கல் கருணைக் கொடை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களை சாா்ந்து ஆயிரக்கணக்கான அா்ச்சகா்கள், பூசாரிகள் உள்ளனா்.

வருவாய் குறைந்த அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைக் கொடை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளின் குடும்பத்தினா் பயனடைவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT