திருப்பூர்

காங்கயம் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு

DIN

காங்கயம் அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காங்கயம் அருகே வட்டமலை பகுதியில் உள்ள முத்துக்குமாரசாமி கோயில், கன்னிமாா் கருப்பராயன் கோயில், நாகாத்தாள் அம்மன் கோயில், கருமண்ராய கருப்பண்ண சுவாமி ஆகிய கோயில்களின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருட முயற்சித்துள்ளனா். ஆனால், இந்த கோயில்களின் பூட்டை உடைக்க முடியவில்லை.

இதில் நாகாத்தாள் அம்மன் கோயிலின் பூட்டை மட்டும் உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் போலீஸாா் தடயங்களை சேகரித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்தும் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT