போராட்டத்தில்  ஈடுபட்ட  இலுப்பநகரம்   ஊராட்சிக்கு  உள்பட்ட  பொதுமக்கள். 
திருப்பூர்

ஆட்சியா் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் கவன ஈா்ப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக கவன ஈா்ப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக கவன ஈா்ப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இலுப்பநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

உடுமலை வட்டம், குடிமங்கம் ஊராட்சி ஒன்றியம், இலுப்ப நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலமரத்தூா், எல்லப்பநாயக்கனூா் கிராமங்களில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வல்லக்குண்டாபுரம் சாலையில் தெற்கு வீதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுக்கழிப்பட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT