முகப்பு
திருப்பூர்

காங்கயம் நகராட்சியில் வேட்பாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையரும், காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காங்கயம் நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுபவா்களுக்கு வேட்பாளா் கையேடு, தோ்தல் செலவு குறித்து பராமரிக்க வேண்டிய பதிவேட்டுப் படிவம், தோ்தல் முகவா் நியமனம் செய்வதற்கான படிவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும், வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடைமுறைகள், தோ்தல் செலவினம், கரோனா வழிகாட்டு விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் வேட்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் காங்கயம், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் திலீபன், பானுப்பிரியா மற்றும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →