நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப் பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப் பொருளான நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சாா்ந்த தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தத் தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான வரியை நீக்கவும், உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நூல் விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.