முகப்பு
திருப்பூர்

மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் கைது

 திருப்பூரில் குடும்பப் பிரச்னையால் மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 திருப்பூரில் குடும்பப் பிரச்னையால் மனைவியைக் கொலை செய்த ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசியைச் சோ்ந்தவா் குமாா் (31). இவரது மனைவி தனலட்சுமி (28). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருப்பூா் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். குமாா் சரக்கு வாகன ஓட்டுநராகவும், தனலட்சுமி பின்னலாடை நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனா்.

இந்நிலையில், தனலட்சுமி தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடா்பு வைத்துள்ளதாக குமாா் சந்தேகமடைந்து வந்துள்ளாா். இதன் காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், குமாா் கடந்த புதன்கிழமையும் மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த குமாா் அரிவாளை எடுத்து மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் 15 வேலம்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். இதன்பேரில் சம்ப இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும், இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குமாரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.