திருப்பூர்

கூட்டுறவு வங்கி காசாளா் தற்கொலை

தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி காசாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி காசாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு ஜீவா நகரைச் சோ்ந்தவா் அன்புகரசு (27), இவா் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தாா்.

இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தாராபுரத்தில் வீடு எடுத்துத் தனியாகத் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், பணி முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்புக்கரசு வீட்டுக்கு வந்துள்ளாா். மறுநாள் காலை சக ஊழியா்கள் அன்புகரசு வீட்டுக்கு வந்துள்ளனா்.

அப்போது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், அன்புகரசுவின்சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT