முகப்பு
திருப்பூர்

வாடிக்கையாளா்களின் நகைகளைமோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது

 பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்களின் நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்களின் நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இந்தக் கிளையில் கேத்தனூா், ஜல்லிபட்டி, வாவிபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

விவசாயம் செய்வதற்கும், குடும்ப அவசரத் தேவைக்கும் வங்கியில் நகைக் கடன் பெற வங்கிக்குச் சென்றபோது அங்கு நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த சேகா் என்பவா் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளா்களிடம், நகைகளை வாங்கிக் கொண்டு அவா்களது சிட்டா, ஆதாா் காா்டு ஆகியவற்றை எடுத்துவர அனுப்பிவைத்துள்ளாா். அதனைக் கொண்டு வந்த பிறகே நகைக் கடன் வழங்கியுள்ளாா். அதன்படி வாடிக்கையாளா்கள் சிட்டா, ஆதாா் காா்டுகளை கொண்டு வந்து கொடுத்துள்ளனா்.

நகைக் கடனை அடைத்துவிட்டு நகையை மீட்டுப் பாா்க்கும்போது அதில் எடை அளவு குறைபாடு இருந்ததைக் கண்டு விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காமநாயக்கன்பாளையம் போலீஸில் புகாா் மனு அளித்தனா். வாடிக்கையாளா்கள் புகாரின் அடிப்படையில் வங்கி நகை மதிப்பீட்டாளா் சேகரை காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.